பஸ்களால் விபத்து அபாயம்

Update: 2023-02-08 13:03 GMT
சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையி்ன் உள்பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லாமல், சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். போக்குவரத்து அதிகமுள்ள இந்த பகுதியில் சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையின் உள்பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி