கால்நடைகளால் விபத்து அபாயம்

Update: 2023-02-05 18:29 GMT
கடலூர் மாநகராட்சி பகுதி முழுவதும் உள்ள சாலைகளில் மாடு, ஆடுகள் அதிக அளவில் சுற்றி வருகிறது. இதனால் நகர் பகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் நாள்தோறும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மாட்டின் மீது மோதி கீழே விழும் சம்பவம் நடந்து கொண்டேதான் உள்ளது. இப்படி சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் மீது மோதி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் விபத்துகளும், உயிர் பலிகளும் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி