திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மெயின்ரோட்டில் ஒருபக்கத்தில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் சாலையில் எதிர்பக்கம், போலீஸ் கூண்டு பகுதியில் இடம் இருந்தும் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.