சிதிலமடைந்து வரும் பாலம்

Update: 2023-02-05 11:36 GMT

கரூர் மாவட்டத்தையும், நாமக்கல் மாவட்டத்தையும் இணைக்கும் காவிரி ஆற்றுப்பாலம் தவுட்டுப்பாளையம்- பரமத்தி வேலூர் இடையே கடந்த1957-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சரின் முயற்சியால் கட்டப்பட்டது. மதுரை, திண்டுக்கல், ராமேஸ்வரம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பழைய பாலத்தின் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டது. சேலம் பகுதியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் வாகனங்கள் புதிய பாலத்திலும், மதுரை, திண்டுக்கல் பகுதியில் இருந்து சேலம் நோக்கி செல்லும் வாகனங்கள் பழைய பாளையத்தலும் சென்று வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து பாலத்தின் தன்மை குறைந்து சிதிலமடைந்து வருகிறது. மேலும் நெடுகிலும் ஏராளமான குழிகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி