விபத்து அபாயம்

Update: 2023-02-05 11:30 GMT

கரூர் மாவட்டம் புங்கோடை பகுதியிலிருந்து சொட்டையூர் வரை நொய்யல் -வேலாயுதம்பாளையம் நெடுஞ்சாலை நெடுகிலும் சாலை விரிவாக்கத்திற்காக தார் சாலை ஓரத்தில் குழிகள் பறிக்கப்பட்டு வருகிறது. பின்னர் குழிகளை நிரப்பி தார் சாலை அமைப்பதற்காக லாரிகளில் செயற்கை மணலுடன் கூடிய ஜல்லி கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தார் சாலை நெடுகிலும் செயற்கை மணல் கிடக்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் லாரிகள், பஸ்கள், கார்களின் டயர்களில் பட்டு புழுதி பறக்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் கண்களில் புழுதி பட்டு விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி