நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-02-01 13:00 GMT
திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து கொப்பம்பட்டி, தம்மம்பட்டி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வழியாக வேலூருக்கு பஸ் இயக்கப்பட்டது. இதனால் துறையூர் பகுதியில் உள்ள மக்கள் திருவண்ணாமலை கிரிவலம் மற்றும் திருப்பதிக்கு சென்று வந்தனர். இந்த பஸ் சேவை தீடிரென நிறுத்தப்பட்டது. இதனால் இந்த பகுதி மக்கள் பஸ் மாறி மாறி செல்வதால் கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்