வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-01-25 13:00 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து சூளகிரி பஸ் நிலையத்திற்குள் வரக்கூடிய பஸ்களும், ஓசூர், பெங்களூரு செல்லும் பஸ்களும் இந்த மேம்பாலத்தின் அடியில் தான் செல்ல வேண்டும். அதேபோல சூளகிரி நகருக்குள் வரக்கூடிய மக்களும் இந்த மேம்பாலத்தின் கீழே உள்ள பாதையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மேம்பாலத்தின் கீழ் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் பஸ் நிலையத்தில் இருந்து வரக்கூடிய பஸ்களும், இந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன. எனவே மேம்பாலத்தின் கீழே வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க காவல் துறையினர் நடவடிக் எடுக்க வேண்டும்.

-முருகன், சூளகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி