கூடுதல் அரசு பஸ்கள் வேண்டும்

Update: 2023-01-25 10:07 GMT

மேட்டுப்பாளையம் அருகே இடுக்கன்பாளையம் உள்ளது. இங்கு பிரச்சித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. ஆனால் இந்த பகுதிக்கு போதிய எண்ணிக்கையில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் அந்த பகுதிக்கு செல்லும் பொதுமக்களும், கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இல்லையென்றால் அதிக வாடகை கொடுத்து தனியார் வாகனங்களில் செல்ல வேண்டி உள்ளது. எனவே கூடுதல் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி