பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2023-01-22 11:18 GMT

கரூர் மாவட்டம் வடுகபட்டி, ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லி கோவில்,கொங்கு நகர் மற்றும் இந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் , மாணவ, மாணவிகள், டெக்ஸ் தொழிலாளர்களுக்கு பலரும் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வந்து கொண்டிருக்கின்றனர். இந்தபகுதியில் பஸ்கள் இயக்கப்படாததால் புன்னம்சத்திரம் மற்றும் நத்தமேடு பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து பஸ்களில் ஏறி சென்று வரவேண்டிய சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குந்தாணிபாளையம் நத்தமேட்டில் இருந்து வடுகபட்டி, நல்லிக்கோயில், கொங்கு நகர் வழியாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி