சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் ஆபத்து

Update: 2023-01-18 16:04 GMT
கரூர் மாவட்டம் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறையில் இருந்து தவிட்டுப்பாளையம் செல்லும் சர்வீஸ் சாலையின் அருகே சமைத்த வாத்துக்கறியுடன் சிற்றுண்டி விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு இந்த சர்வீஸ் சாலை வழியாக பரமத்தி வேலூர், நாமக்கல், சேலம் ,திருச்செங்கோடு , பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் கார்கள் மற்றும் லாரி டிரைவர்கள் சாலையின் ஓரங்களிலேயே நெடுகிலும் லாரிகள், கார்களை நிறுத்தி விட்டு சாப்பிட சென்று விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்