பயணிகள் கடும் அவதி

Update: 2023-01-11 12:37 GMT
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பயணிகள் வந்து செல்கிறார்கள். இதேபோல் அங்கிருந்து இந்த பஸ் நிலையத்திற்கு பயணிகள் வருகிறார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பயணிகள் நிற்கும் இடங்களில் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே பயணிகள் நலன் கருதி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி