திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் காந்தி சாலையும், அம்மாமண்டபம் சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் இரு, நான்கு சக்கர வாகனங்களை சாலையோரம் அதிக அளவில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.