விபத்து அபாயம்

Update: 2023-01-04 12:01 GMT
கரூர் மாவட்டம் நொய்யல், மரவபாளையம், சேமங்கி, கவுண்டன்புதூர், ஓலப்பாளையம் ,ஒரம்புபாளையம், சிவகிரி, நல்லிக்கோவில், தாமரைப் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சாணி குப்பைகள், கோழிகுப்பைகள், கரும்புகள், மாட்டு தீவனம், கோழி தீவனம், ஜல்லிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை 2 டிப்பர்களில் ஏற்றிக்கொண்டு டிராக்டர்கள் நொய்யல்- பரமத்தி வேலூர் செல்லும் தார் சாலையில் அதிவேகமாக இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் டிராக்டரில் 2 டிப்பர்களை இணைத்துக்கொண்டு செல்லும்போது விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி