நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-01-04 12:01 GMT
சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தவுட்டுப்பாளையம் பஸ்நிறுத்தம் பகுதியில் அரசு டவுன் பஸ்களும், சில தனியார் பஸ்களும் நின்று செல்கின்றன. தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கரூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த பஸ் நிறுத்தத்தில் மழை மற்றும் வெயில் காலங்களில் நின்று பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி