விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி- கல்லூரி செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?