சுகாதார கேடு

Update: 2022-12-18 16:41 GMT

கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். இங்குள்ள சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மூக்கைபிடித்து கொண்டு நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகங்களை முறையா பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி