புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-12-14 12:05 GMT

திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, சே.புதூர், சேனப்பநல்லூர், நாயக்கன்பட்டி, காவிரிப்பட்டி, தா.பேட்டை வழித்தடத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் போதுமான போக்குவரத்து வசதியின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து துறையூரில் இருந்து மேற்கண்ட விழித்தடத்தில் பவித்திரம் அல்லது எருமைப்பட்டி வரை புதிய வழித்தடத்தில் நகர பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி