விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியிலிருந்து சிவகாசிக்கு செல்வதற்கு போதிய அளவு பஸ்கள் இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்பவர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?