பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2022-12-04 09:21 GMT

கோவை பேரூர் மெயின் ரோட்டில் எல்.ஐ.சி. காலனி பஸ் நிறுத்தத்துக்கும், தெலுங்குபாளையம் பஸ் நிறுத்தத்துக்கும் இடைப்பட்ட 1½ கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்பவர்கள் மேற்கண்ட நிறுத்தங்களுக்கு சென்று பஸ்களில் ஏறி செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் அங்குள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு பஸ் நிறுத்தம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று அங்கு பஸ்களை நிறுத்தி செல்ல உயர் அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது. ஆனாலும் அங்கு பஸ்களை நிறுத்துவது இல்லை. இதனால் பொதுமக்கள் தினமும் அவதிப்படுகிறார்கள். எனவே பஸ்களை நிறுத்தி செல்ல உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி