நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-11-30 17:20 GMT

தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, ஓசூர், மேட்டூர் ஆகிய ஊர்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வருகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் 5 ரோடு செல்லாமல் சேலம் குரங்குச்சாவடி சந்தை அருகில் மேம்பாலம் செல்லும் இடத்திலேயே பயணிகளை இறக்கி விட்டு அந்த வழியாகவே புதிய பஸ் நிலையத்துக்கு சென்று விடுகிறது. இதனால் முதியவர்கள், பெண்கள் குழந்தைகளுடன் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து 5 ரோடுக்கு நடந்து செல்கின்றனர். எனவே அனைத்து பஸ்களும் 5 ரோடு வழியாக சென்று வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி