தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-11-27 12:01 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் குப்பையன்பட்டி விளக்கு சாலை அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது தேசிய நெடுஞ்சாலையின் உயம் 5 அடி உயர்த்தப்பட்டதால் பணிகள் நிழற்குடை 5 அடி பள்ளத்திற்கு சென்றதால் பயணிகள் பயன்படுத்தமுடிய நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழைய பயணியர் நிழற்குடையை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி