ஆபத்தான பயணம்

Update: 2022-11-27 10:23 GMT

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பகுதியில் குழந்தைகள் அதிகளவில் ஆட்டோக்களில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதில் ஒரு சில ஆட்டோக்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. குறிப்பாக ஆட்டோக்களில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். குழந்தைகள் ஆட்டோவின் பின்புறமும் அமர வைக்கப்பட்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனை பார்க்கும் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி முறையான நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்

பஸ் வசதி