சிக்னல் விளக்கு அவசியம்

Update: 2022-11-27 09:58 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு  பகுதியில் சிக்னல் விளக்கு இல்லை. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை உறுவாகிறது. மேலும் சிக்னல் விளக்கு இல்லாததால் வாகனங்கள் வேகமாக செல்வதால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலைய உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு சிக்னல் விளக்கு அமைத்து போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்