பஸ் இயக்கப்பட்டது

Update: 2022-11-27 09:11 GMT

நாகர்கோவிலில் இருந்து மணவாளக்குறிச்சி, சின்னவிளை பகுதிக்கு தடம் எண் 5டி/39 அரசு இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களாக அந்த பஸ் காலை வேளையில் முறையாக இயக்கப்படாமல், மாலை நேரத்தில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதனால், அந்த பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் அரசை காலை, மாலை வேளைகளில் முறையாக இயக்கி வருகின்றனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

எம்.எஸ்.சலீம், மணவாளக்குறிச்சி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி