விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழிக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆதலால் பயணிகள் மாற்று பஸ் வரும் வரை காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.