நிறுத்தப்பட்ட நகர பஸ்சால் மக்கள் அவதி

Update: 2022-11-23 11:59 GMT

அரியலூரில் இருந்து அரங்கோட்டை வரை நாகமங்கலம், பட்டகட்டாங்குறிச்சி, செங்குழி, தீயனூர், விக்கிரமங்கலம் வழியாக சென்ற நகர பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதியிலிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் மருத்துவமனை செல்லும் நோயளிகள் என அனைவரும் சுமார் 5 கிலோ மீட்டர் நாகமங்கலம் நடந்து வந்து பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட நகர பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்