விருதுநகர் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் எதிரே பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி இருக்கை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.