நல்லாறு செடிகளால் ஆக்கிரமிப்பு

Update: 2022-11-20 13:36 GMT

நல்லாறு செடிகளால் ஆக்கிரமிப்பு

 மனித வாழ்க்கையில் நீர்நிலைகள் தேவை என்பது அதிக முக்கியதுவம் வாய்ந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான ஆறுகள், குளம், குட்டைகள் செடி, கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. செடி, கொடிகள் ஆக்கிரமிப்பால் மழை காலங்களில் மழைநீர் செல்வதற்கு வழியின்றி தடைப்படுகிறது. இந்தநிலையில் அவினாசி அருகே திருமுருகன்பூண்டி பகுதியில் நல்லாறு ஓடுகிறது. இந்த நல்லாறு செடிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, புதர்மண்டி கிடக்கிறது.

 இதனால் மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி, தேங்கி நிற்கிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை நல்லாற்றில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் நல்லாறு மாசுப்படுகிறது. எனவே நல்லாற்றில் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-ராஜா, திருப்பூர்.

9841756431

மேலும் செய்திகள்

பஸ் வசதி