பஸ் வசதி வேண்டும்

Update: 2022-11-20 10:43 GMT

தஞ்சை-திருவையாறு வழித்தடத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு இரவு நேரங்களில் முறையான பஸ் வசதி இல்லை. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் இரவு நேரங்களில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் இரவு நேரங்களில் பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்