கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-11-09 16:08 GMT

செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் சுரண்டை, கொடிக்குறிச்சி, ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளில்பயின்று வருகின்றனர். செங்கோட்டையில் இருந்து சுரண்டைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். எனவே, அந்த வழியாக காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி