கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-11-06 13:26 GMT

விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி கிராமத்திலிருந்து விருதுநகர் பஸ் நிலையம் செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. அதிலும் குறிப்பாக காலை 8 மணிக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. அதன் பின்னர் 5 மணி நேரம் கழித்தே அடுத்த பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள், நோயாளிகள், வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்