நடவடிக்கை தேவை

Update: 2022-11-02 14:52 GMT

நாகர்கோவிலில் இருந்து தக்கலை வழித்தடத்தில் தடம் 12 'J ' அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் தக்கலையில் இருந்து இரணியல் சந்திப்பு, காற்றாடிமூடு சந்திப்பு, மடவிளாகம், கண்டன்விளை, குசவன்குழி, மொட்டவிளை, நெட்டாங்கோடு வழியாக நாகர்கோவில் சென்று வந்தது. இந்த பஸ் மூலம் அந்த பகுதி கிராம மக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால், தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவிகுமார், மொட்டவிளை.

மேலும் செய்திகள்

பஸ்வசதி