ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நான்கு ரோடு ரவுண்டானாவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் சிக்னல் விளக்கு செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே போக்குவரத்து சிக்னல் உடனடியாக செயல்பட சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.