பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2022-10-30 18:11 GMT
பண்ருட்டி தாலுகா கொஞ்சிக்குப்பம் கிராமம் சமுத்துவபுரத்தில் உள்ள பள்ளியில் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் சமத்துவபுரத்தில் பஸ் நிறுத்தம் இல்லாததால் அங்கு பஸ்கள் நிற்பதில்லை. இதனால் மாணவர்கள் கொஞ்சிக்குப்பத்தில் இரங்கி பள்ளிக்கு சுமாா் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி சமத்துவபுரத்தில் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்