பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
காங்கயம் அருகே கோவை நெடுஞ்சாலையில் உள்ள காடையூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை உடைந்து, கீழே விழுந்த நிலையில் உள்ளது. கடந்த 2 மாதத்திற்கும் மேலாக இந்த நிழற்குடை சரி செய்யப்பாடாமல் இப்படியே விடப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் உடைந்த நிழற்குடையால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து காடையூரில் உடைந்து கீழே விழுந்து கிடக்கும் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.
உதயன்,காங்கயம்.
9865180257