நிறுத்தப்பட்ட பஸ்சால் மாணவர்கள் அவதி

Update: 2022-10-26 15:19 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் இருந்து காலை 8.10 மணிக்கு நெல்லைக்கு புறப்பட்டு செல்லும் அரசு பஸ் (வழித்தட எண்:- 136 பி) கடந்த சில நாட்களாக சரிவர இயக்கப்படவில்லை. இதனால் நெல்லையில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அரசு பஸ்சை தினமும் முறையாக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி