மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம், தாதிபுரம், அனைப்பட்டி வழியாக நிலக்கோட்டை அரசு கலை கல்லூரி வரை இயக்கப்படும் அரசு பஸ் சில சமயங்களில் மாலை வேளையில் இயக்கப்படுவதில்லை. இதனால் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் கல்லூரி மாணவிகள் இரண்டு, மூன்று பஸ் மாறி செல்வதுடன் வீட்டிற்கு செல்ல இரவு நேரமாகி விடுகிறது. எனவே மாணவிகளின் பாதுகாப்பை கருதி இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.