விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.