தடுப்பு கம்பி சேதம்

Update: 2022-10-19 13:55 GMT
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி ரஹ்மத்நகர் பகுதியில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவு பகுதியில் விபத்தை தடுக்க போலீசார் 2 பேரிகார்டுகள் (தடுப்பு கம்பிகள்) வைத்துள்ளனர். இதில் ஒரு தடுப்பில் இருந்த அடைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் கழன்று விழுந்து விட்டது. இதனால் திறந்த நிலையில் இருப்பதால் வாகனங்கள் செல்லும்போது பேரிகார்டில் உள்ள இடைவெளி வழியாக கால்நடைகள் புகுந்து வாகனங்களின் குறுக்கே செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், காலநடைகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே திறந்த வெளியில் உள்ள பேரிகார்டை மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்