கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சங்கரன்தெருவில் சிறிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திரும்பும் இடத்தில் இருந்து பாபுராவ் தெரு, ரெட்டி சத்திரம் தெரு வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆகவே இந்த பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும்.