விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து வத்திராயிருப்பு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர் என அனைவரும் சிரமப்படுகின்றனர். ஒரு சிலர் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.