கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-10-12 10:35 GMT

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை, வாகைக்குளம், தெய்வச்செயல்புரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாலையில் நெல்லை செல்வதற்கு போதிய பஸ்கள் இல்லை. பெரும்பாலான பஸ்கள் இடை நிறுத்தம் இல்லாமல் செல்வதால், 1 மணி நேரத்துக்கும் மேலாக பஸ்சுக்காக காத்து நிற்கும் நிலை உள்ளது. அந்த வழியாக இயக்கப்படும் பஸ்களில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கி செல்கின்றனர். எனவே அந்த வழியாக கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஆவன செய்வார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி