சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து மதுரைக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த வழியாக பயணிக்கும் பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.