பஸ் வசதி இன்றி மக்கள் அவதி

Update: 2022-10-02 12:08 GMT

கரூர் மாவட்டம், நல்லிக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து கூலி வேலைக்கு செல்வோர், பல்வேறு அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்பவர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த வழியாக எந்த ஒரு பஸ் போக்குவரத்தும் இல்லாததால் இருசக்கர வாகனங்களில் மட்டுமே வெளிவர்களுக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அதேபோல் கூலி வேலைக்கு செல்பவர்களும் வாகனங்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்