சிவகங்கை நகர் பகுதியில் இயங்கும் பஸ்களில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக காலை. மாலை வேளைகளில் இயக்கப்படும் பஸ்களில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணித்து வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ் படிக்கட்டு பயணத்தை முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.