விபத்தில் சிக்கும் வாகனங்கள்

Update: 2022-09-29 14:54 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி முதல் பாலகட்டை வரை உள்ள சிமெண்டு சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயகற்று காணப்படுகிறது. மேலும் சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் கீழே விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்