சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களுக்கு போதிய அளவில் டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக சாக்கோட்டை ஒன்றிய கிராமங்களுக்கு அதிகளவில் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.