நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சேரிங்கிராஸ், காபி ஹவுஸ் ஆகிய பகுதிகளில் இரவு நேர சாலையோர கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. அவை சாலையை ஆக்கிரமித்து போடப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையோர வியாபாரிகளுக்கு கடை அமைக்க தனியாக இடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.