புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, குப்பகுடி கிராமத்தில் உள்ள அரிசி ஆலை மற்றும் தேங்காய் நார் தொழிற்சாலைகளுக்கு அடிக்கடி கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சாலை குறுகிய அளவு உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலை அரிமளம் பகுதிக்கு இணைப்பு சாலையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.