நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-09-26 12:44 GMT

நாகையில் இருந்து திருக்கண்ணபுரம் வரை அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சின் மூலம் திருமருகல், திருப்புகலூர், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி திருக்கோவிலை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட பகுதிகளில் இருந்து நாகைக்கும், நாகையில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கும் இயக்கப்பட்ட இந்த பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பயணம் செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை சீரமைப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட இந்த பஸ் பணிகள் முடிந்த பின்னரும் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி,கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி